விஜய்க்கு மட்டும் பிரச்சனை எங்கிருந்து தான் வருகிறதோ தெரியவில்லை. சமீபத்தில் வெளிவந்த கத்தி படத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி செய்த ஊழலை சுட்டி காட்டி பேசினார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.இதற்காக நடிகர் விஜய் மற்றும் முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இதனால் நடிகர் விஜய் விரைவில் கைதாவார் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது.ஆனால், இது உண்மையா என்று யாருக்கும் தெரியவில்லை, இச்செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை கண்டு திரையுலகத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.இந்த காட்சியை சென்ஸார் போர்ட் அனுமதித்த பின் தானே படம் வெளியானது, பின் எப்படி கேஸ் போட முடியும்? என்றும் ரசிகர்கள் இளைய தளபதிக்கு ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

 
Top