கத்தி எப்படி வருகிறது என்று பார்க்கலாம்? ஆஸ்கர் ரவிச்சந்திரன் சவால் !!!

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். ஒருவர் ஒரு படத்தை தயாரிப்பதற்கே முழி பிதுங்க, ஒரே நேரத்தில் 4, 5 படங்களை தயாரித்து வருகிறார் இவர்.


அதில் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தை 150 கோடி ரூபாய்க்கு மேல் தயாரித்துள்ளார், விரைவில் வெளிவரயிருக்கும் இப்படத்தில் டீசரை யாரோ வெளியிட, சில இணையதள பிரமுகர்களை கூப்பிட்டு செம்ம ரைடு விட்டுள்ளார்.

மேலும் இதை யாரிடம் வேண்டுமானாலும் சொல்லுங்கள் எனக்கு கவலையில்லை, என்று கூறியது மட்டுமில்லாமல் ஒரு அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளார்.

இதில் நடிகர் விஜய் இவரிடம் ரூ 15 கோடி வாங்கியதாகவும், அதை இன்று வரை கொடுக்காமல் இருந்து வருவதால், இந்த தீபாவளி அன்று கத்தி எப்படி திரைக்கு வருகிறது என்று நான் பார்க்கிறேன்? என கோபத்துடன் கூறியதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

 
Top